
கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவன் ராவுல் ஜான் அஜூ, தனது சொந்த AI தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதில் 15 பேர் பணிபுரிகின்றனர்.
நிறுவனத்தில் பணிபுரியும் தனது தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கும் ராவுல், இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் மாணவர்களுக்கு AI பயிற்சி அளித்துள்ளார்.
நிஜ வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் RESQ AI, MeBot, ZapGap உள்ளிட்ட 15 AI கருவிகளை இந்த இளம் தொழில்முனைவோர் உருவாக்கியுள்ளார்.