
சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டி சார்பில் ராம்நகர் பூங்காவில் நடைபயணம் நடைபெற்றது.
சுமார் 100 பேர் பங்கேற்ற இந்த நடைபயணத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநர் மாருதி கொடியசைத்து தொடங்கி வைக்க, அது கோவை டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் வளாகத்தில் நிறைவடைந்தது.
1921 ஜூலை 27 அன்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஃபிரெடரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் ஜான் மேக்லியோட் ஆகியோரால் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை டாக்டர் பாலமுருகன் நினைவு கூர்ந்தார்.