கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு முன்னணி நிதி நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இந்த பங்குகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 41% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தங்க நகை சந்தையில் நிறுவனத்தின் வலுவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களே இந்த நேர்மறையான கணிப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.