
தீவிரவாதம் மற்றும் சைபர் மோசடிகளுக்கு உதவியதாகக் கூறி, டெலிகிராம் மெசஞ்சர் நிறுவனத்தின் சிஇஓ 41 வயதான பாவெல் துரோவை ரஷ்யா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
உக்ரைன் உளவுத்துறை மற்றும் தீவிரவாத அமைப்புகள் டெலிகிராம் தளத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும், ஆட்சேபனைக்குரிய சேனல்களை நீக்க நிறுவனம் தவறியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு முகமை குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவில் ஏற்கனவே டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான கிரிமினல் விசாரணை ஜோடிக்கப்பட்டது என பாவெல் துரோவ் முன்னதாகவே குற்றம் சாட்டியிருந்தார்.