
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களால் இந்தியப் பொருளாதாரத்திற்குப் புதிய சவால்கள் எழுந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு நாட்டின் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சூப்பர் எல்நினோ பருவநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ள போதிலும், நாட்டில் போதிய உணவு தானிய இருப்பு உள்ளதாக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.