
எஃப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் உறுதியாக உள்ளது.
இந்த மசோதாவை விரிவான ஆய்விற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மத்திய அரசு எடுத்துள்ள முடிவை ஒரு நேர்மறையான நடவடிக்கையாக மன்றத்தின் தலைவர் பி.வில்சன் வரவேற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 6 வரை பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்திய இக்குழு, மசோதாவால் தொண்டு மற்றும் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளது.