
புதுடில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷீ ஜின்பிங், விதிமுறைகள் இல்லாத உலகம் போக்குவரத்து சிக்னல்கள் இல்லாத சந்திப்பைப் போன்றது என்று எச்சரித்துள்ளார்.
சர்வதேச விதிகள் அனைத்து நாடுகளுக்கும் சமமாக பொருந்த வேண்டும் என்றும், சில நாடுகள் அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வளரும் நாடுகளுக்கு சர்வதேச நிதி அமைப்புகளில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்றும் சீனா சார்பில் ஐந்து அம்ச திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.