
15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் மூலம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அனுபவம் பெறுவதுடன், சிகப்புப் பந்து கிரிக்கெட்டிலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இதுவரை 8 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 17.25 சராசரியைக் கொண்டுள்ளார்.
விரைவில் தொடங்கவுள்ள துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடவுள்ள வைபவ், சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் தனது அனுபவத்தை அதிகரிக்க உள்ளார்.