ரத்த சோகையைத் தவிர்க்க கம்பு, ராகி, முழு தானியங்கள், பட்டாணி, தண்டுக்கீரை மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சி, ஈரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றைச் சேர்ப்பது இரும்புச் சத்தை அதிகரிக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இரும்புச் சத்து மாத்திரைகளை உட்கொள்ளும்போது காபி, டீ மற்றும் கால்சியம் மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை இரும்புச் சத்து கிரகிப்பைத் தடுக்கும்.