
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
தாக்குதல் நடத்திய பெண்ணை போலீசார் சுட்டுக் கொன்ற நிலையில், இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்த 42வது வீதி மற்றும் 7வது அவென்யூ பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.