
கோவை மாவட்டம் அன்னூர் உப்புத்தோட்டம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடித்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மோகன் (65) மற்றும் ராணி (75) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வீடுகளுக்குள் புகை புகுந்ததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் அளிக்கப்படாத நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் களஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.