
ஜூலை 20-ம் தேதி நடந்த மாணவர் போராட்டத்தின்போது பெல்லட் குண்டுகளால் கண்பார்வை இழந்த சாஹில் லோச்சாப் அளித்த புகாரை ஏற்காததால் ராகுல் காந்தி காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரியங்கா காந்தி மற்றும் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 118 மற்றும் 125-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசார் முதல் தகவல் அறிக்கையின் நகலை புகார்தாரரிடம் வழங்கியதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.