
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷீ ஜின்பிங், பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் கலந்துகொள்ளவில்லை.
நீண்ட தூர பயணம் மற்றும் நேர வித்தியாசத்தால் ஜின்பிங் சோர்வாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மாநாட்டின் இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.