
மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையின் போதே, இதயப் பிரச்சனைகளையும் கண்டறியும் புதிய மருத்துவத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பரிசோதனைகளைச் செய்ய உதவும் என்பதால், மருத்துவச் செலவு மற்றும் நேரம் குறையும்.
புற்றுநோய் மற்றும் இதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.