
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை வாரத்திற்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக தினந்தோறும் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
பள்ளி நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.