
சென்னை கோவிலம்பாக்கத்தில் 27 வயது ஆசிரியை புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், வரதட்சணை கொடுமை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
2024 செப்டம்பரில் திருமணம் நடந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாகப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் தற்கொலை நிகழ்ந்துள்ளதால், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றியுள்ளனர்.