
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வசூலித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை தி.நகர், பசுமை வழிச்சாலை மற்றும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உள்ளிட்ட 9 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், 118 ஆவணங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீடுகளில் நடைபெற்ற இந்தச் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.