
சென்னையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது.
பட்டணப்பாக்கத்தில் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நவீன கட்டிட வளாகம் அமைய உள்ளது.
இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.