
பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்திற்காக 1.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11,000 கோடி) கடன் வாங்கியுள்ளதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
வருமானம் தரும் சொத்துகளை வாங்குவதற்காக கடன் வாங்குவது பணக்காரர்களின் அணுகுமுறை என்று கூறும் அவர், வரிவிலக்கு பெறவே இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்.
இந்தக் கடன் அவரது தனிப்பட்ட பொறுப்பு அல்ல என்றும், 1,500 குடியிருப்பு பிரிவுகளுடன் தொடர்புடையது என்றும் அவரது முன்னாள் மனைவி கிம் கியோசாகி தெளிவுபடுத்தியுள்ளார்.