
பாங்காக்கில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் ரூ. 1.5 லட்சம் பில் தொகையைச் செலுத்தாத 18 வயது இளம்பெண்ணின் தலை, பார் மேலாளரால் கட்டாயப்படுத்தி மொட்டையடிக்கப்பட்டது.
போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி கடைக்குள் நுழைந்த அந்தப் பெண், 200 மதுபானங்களை ஆர்டர் செய்த நிலையில் பணம் செலுத்த முடியாமல் சிக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பார் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், போலீசார் மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.