
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் தந்தை வி. சாந்தகுமாரன் நாயர், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வர வேண்டியுள்ளதால் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை வரை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கோதமங்கலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள நிலையில், உலகக் கோப்பையை வென்ற டி20 மற்றும் ஒருநாள் அணிகளிலும் இடம் பெற்றிருந்தார்.