
இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு மற்றும் சாலை துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால், மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி குடயத்தூர் ஊராட்சியில் சுமதி என்பவரும், வாகமன் அருகே பிரபாகரன் நாயர் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவருமாக மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.
மலைச் சாலைகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மலையேற்றம் மற்றும் படகு சவாரிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.