
கென்யாவின் மண்டிரோ நகரில் உள்ள வெண்டிடேம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
சோமாலியா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க கென்ய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தாக்குதல் நடந்த பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.