
உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 11.45 மணியளவில், கேரளாவின் வாளையார் பகுதியில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் மற்றும் குட்டி யானை உயிரிழந்தன.
இந்த விபத்தினால் கோவை - கேரளா இடையேயான ரயில் சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டு, ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 13-ம் தேதி அதிகாலை வரை மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், கேரள வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.