
பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளைப் பின்பற்றி, இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சமூக ஊடக அடிமைத்தனத்தைத் தடுக்க, மத்திய அரசு உடனடியாகச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கனடா, பிரேசில், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இத்தகைய தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவிலும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளன.