
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, ராஜேஷ், தியாகராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீனும், தீபக் உள்ளிட்ட 4 பேருக்கு முன்ஜாமீனும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.