
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட 3 மாத தடையை ரத்து செய்யக் கோரிய மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
லிபின் பொன்னுசுவாமி லீலா மற்றும் அருண் அரவிந்த் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், கனிம வளத்துறை இயக்குநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரியிருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளதால், இந்த மனுவை எங்கு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.