செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் லேபிள் இடுவது கட்டாயம் என மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டீப் ஃபேக் (Deepfake) போன்ற தொழில்நுட்பங்களால் ஏற்படும் தவறான தகவல்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.