
அரசு பேருந்துகளில் பயணிகள் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் வீடியோ பார்ப்பது மற்றும் பாடல்கள் கேட்பதற்குத் தமிழக போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்து துறை செயலர் நிர்மல்ராஜ் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பயணத்தின் போது மொபைல் போனில் உரத்த குரலில் பேசுவதையும், ஸ்பீக்கரை ஆன் செய்து பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.