
முன்னணி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டாளராகச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு, பணியில் சேர்ந்த நாள் முதல் எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை.
நிறுவனம் முழு சம்பளத்தை வழங்கி வந்தாலும், பொறுப்பான பணிகள் ஏதுமின்றி சும்மா அமர்ந்திருப்பது தனது திறமையைக் குறைத்துவிடுமோ என்று அவர் ரெடிட் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
வேலை செய்யாமல் சும்மா இருக்கும் ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் போது முதலில் நீக்கப்படுவார்கள் என்று மூத்த ஊழியர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.