
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் நானா-மாம்பெரே மாகாணத்தில் உள்ள அப்பா பகுதியில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட துணை மேயர் சுலைமான் பி, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 30 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் இப்பகுதியில் சுரங்க விபத்துகள் சாதாரணமாக நிகழ்கின்றன என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் கூறினார்.