
புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை வளர்ச்சி கழகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி 2026 வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பூரணாங்குப்பம் அம்மன் கோவில் திடலில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியின் நிறைவில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற சிலம்ப வீரர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.