
தமிழகத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் கொள்ளிடத்தில் தலா 7 செமீ மழை அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது.