
ஈரான் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க போதுமான போர்க்கப்பல்கள் இல்லை என அமெரிக்க தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் பென்டகனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கூடுதல் போர்க்கப்பல் அனுப்பப்படாவிட்டால், அமெரிக்க வளங்களை பாதுகாப்பதா அல்லது இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிப்பதா என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவின் ஐந்து போர்க்கப்பல்கள் ஸ்பெயினில் உள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆறாவது கப்பல் படையில் இணைய உள்ளது.