
நாட்டின் ரசாயன ஏற்றுமதியை 2030-க்குள் ரூ.7.25 லட்சம் கோடி முதல் ரூ.7.73 லட்சம் கோடி வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரசாயன உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 14 சதவீதம் வளர வேண்டும் என்றும், 7 முதல் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2022-23-ல் ரூ.10.50 லட்சம் கோடியாக இருந்த ரசாயன உற்பத்தி மதிப்பு, 2030-க்குள் ரூ.21 லட்சம் கோடி முதல் ரூ.26.73 லட்சம் கோடி வரை உயர வேண்டும்.