
தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோயில்களில் புனிதத்தன்மையை பாதுகாக்க இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.
பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க கோயில்களில் 20,000 செல்போன்கள் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பு பெட்டக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோயிலுக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் செயல்கள் தொடர்ந்தால், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.