
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை காட்டி ரூ. 30 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
FQL Exchange மற்றும் VG Investment செயலிகள் மூலம் சுமார் 8,500-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.