
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றமான சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
அன்னிய முதலீடுகளின் தொடர்ச்சியான வருகை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆதரவு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது வலுவடைந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.