
தமிழகத்தில் செப்டம்பர் 5 முதல் 8-ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 7.6 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் செப்டம்பர் 8-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் திண்டிவனம், கடவனூரில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.