
தெற்கு லெபனானின் கபர் ரிமன் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் மேலும் 13 பேர் படுகாயமடைந்த நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.