
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற டெல்லி மற்றும் பிற மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்டவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் மீதான வழக்குகளை முடித்து வைக்கலாம் என நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
போராட்டங்களின் போது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கப்போவதாகத் தெரிவித்துள்ள நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைத்துள்ளது.