
ஸ்பெயினின் மல்ரோகா தீவு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 19 பேர் சட்டவிரோதமாக ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், 2 பேர் மட்டுமே உயிர் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்பெயின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அகதிகள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வது தொடர் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது.