
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால் இந்த மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யலாம்.