
கொரியாவில் நடைபெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா சீன வீராங்கனை ஹான் குயான்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
முதல் செட்டை 14-21 என இழந்த அஷ்மிதா, அடுத்த இரண்டு செட்களை 21-14, 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி தனது முதல் சர்வதேச சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
கடந்த வாரம் தைபே ஓபனில் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது அஷ்மிதா சலிஹாவின் இந்த வெற்றி இந்திய வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.