
சுவீடனின் பாகர்ஸ்டா நகரில் உள்ள பிரினெல் உயர்நிலைப் பள்ளியில் 18 வயது இளைஞர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் எனத் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
இந்த வன்முறைச் சம்பவத்திற்கு சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.