/nakkheeran/media/media_files/2026/09/16/t-2026-09-16-16-26-03.jpg)
ஈரானில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (15-09-26) அன்று புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் சக்கரம் ஒன்று கழன்று விழுந்தது.
இதனால் விமானத்தில் இயந்திரக்கோளாறு மற்றும் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டதோடு, பயணிகள் அச்சத்தில் உறைந்த நிலையில் விமானம் மீண்டும் மஷ்ஹத் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் மேற்கூரைகள் இடிந்து பயணிகள் மீது விழுந்த போதிலும், இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயங்களோ அல்லது உயிருக்கு ஆபத்தோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.