
தென் கொரியாவின் சியோல் நகரில் செப்டம்பர் 18-19 தேதிகளில் நடைபெறும் டேவிஸ் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.டி.பி. தரவரிசையில் 362-வது இடத்தில் உள்ள மனாஸ் தம்னே, ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
சுமித் நாகல், தக் ஷினேஸ்வர் சுரேஷ் மற்றும் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் அணியில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளனர்.