
திமுக தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இனி 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
70 வயதைக் கடந்தவர்கள் மாவட்ட செயலாளராக இருக்க முடியாது என்ற புதிய விதியின்படி, பல சீனியர் தலைவர்களின் பதவிகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மாவட்ட செயலாளர் பதவிகளில் அமல்படுத்த வேண்டும் என திமுக மகளிரணி கோரிக்கை விடுத்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.