
தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசு துப்பாக்கி இறக்குமதி மற்றும் புதிய உரிமங்கள் வழங்குவதை இடைநிறுத்தி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் நிதி நெருக்கடியில் சிக்கி, சில உரிமையாளர்கள் தங்கள் தொழிலை ரொட்டிப் பாக்கரி போன்ற வேறு வணிகங்களாக மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் சுமார் 1 கோடி துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ள நிலையில், அதில் 40 லட்சத்திற்கும் அதிகமானவை சட்டவிரோதமானவை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.