
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்ப அலையால் பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000-ஐ கடந்துள்ளது.
குளிர் பிரதேசமான பெல்ஜியத்தின் வாலோனியா பகுதியில் மட்டும் இறப்பு விகிதம் வழக்கத்தை விட 77% அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வெப்ப அலையால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பாதிப்புகள் மோசமடையக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.